Sunday, April 18, 2010

கோடை வள்ளல்




என் இனிய பதிவுலக நண்பர்களுக்கு.....

"என்னடா இது... ரெண்டு மூணு பதிவு போட்டுட்டு வெட்டி எங்கேயோ ஓடிடுச்சு" என்று எண்ணி நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிறீர்களா? அது தான் கிடையாது...

கோடைக்காலம் தொடங்கி விட்டது...இதை நான் சொல்லி உங்களுக்கு தெரிய தேவை இல்லை தான்....அனால் கோடை என்ற உடன் உங்களுக்கு நினைவுக்கு வருவது என்ன? எனக்கெல்லாம் ஒரு சில குறிப்பிட்ட விஷயங்களுக்காக மட்டுமே கோடையை கொண்டாடத் தோன்றும். மார்க்கெட்-இல் புதிதாக வரும் பச்சை மாங்காயை பருப்பு சாம்பாருக்கு கடித்துக் கொண்டு சாப்பிடுவது, கம்பங்கூழ் செய்து பச்சை மிளகாய்களை வதக்கிக் கலந்து சாப்பிடுவது, தயிர் சாதம் மட்டுமே செய்து மோர் மிளகாய் , கருவேப்பிலை துவையல் , இஞ்சித் துவையல், எலுமிச்சை ஊறுகாய் என்று சகல விதமான side dish-களுடன் உள்ளே தள்ளுவது, rasna கலந்து ஆண்ட குண்டா அளவுகளில் குடிப்பது - இவ்விதமாக, பர வெட்டியாக இருந்த நான் படு பிசியாகி விட்டேன். இத்துடன் நான் செய்த ஒரு பெரிய்ய தவறால் தான் பதிவு பக்கம் வர முடியாமல் செய்து விட்டது. கமலா ஆரஞ்சு சீசன் தொடங்கி ஊரெல்லாம் எங்கு பார்த்தாலும் அழகாக அடுக்கி வைத்திருக்கிறார்கள். எனக்கும் கமலா ஆரஞ்சு-கும் ஏழாம் பொருத்தம். ஆனாலும் ஆசை யாரை விட்டது? ஒரேடியாக பத்து பழம் உள்ளே தள்ளியதும் தொண்டை கட்டிக் கொண்டு காய்ச்சல் வந்து டாக்டரிடம் ஊசி போட்டுக் கொண்டு - இதில் வேறு ஒரு மூன்று நாட்கள் காலவிரயம்.

சரி...போனது போகட்டும்...இந்த 17 நாட்களில் நடந்த சில முக்கியமான நிகழ்வுகள்

என் இரண்டேகால் வயதான ரெட்டைவால்கள் அவர்களது பள்ளி ஆண்டு விழாவில் (playschool) முதன்முதலாய் அழகான் ஆடைகள் அணிந்து மேடையேறி ஒரு சிறிய நடனமாடினார்கள். உண்மையில் கற்றுக்கொடுக்கப்பட்ட எந்த அபிநயத்தையும் அவர்கள் செய்ததாகத் தெரியவில்லை . அனால் மேடையில் இருந்த மற்ற நான்கு குழந்தைகளும் ஆடாமால் அழுதபடியே நின்றதால் எல்லோர் கவனமும் இவர்கள் மீது தான் இருநதது. இவர்கள் ஆடிய சொந்த ஆட்டத்திற்கு தான் பலத்த கரகோஷங்கள்...என்னவென்று சொல்ல....எங்கள் எல்லோர் மனங்களும் பூரித்துப் போயின...

பதிவு பக்கம் வராமலிருந்த பொது மூன்று படங்கள் பார்த்தேன்...அதற்கு மேலே கூட பார்த்திருப்பேன்...ஆனால் மனதில் நின்றவை இவை மூன்று தான்...அதனால் இதோ என் கருத்துகள்...

அவதார் - சத்யம் திரையரங்கில் 3D யில் பார்த்த போது இந்த படம் என்னுள் ஒரு பெரிய்ய பாதிப்பை ஏற்படுத்தியது. நாம் இயற்கையை நேசிப்பதில்லை என்கிற குற்ற உணர்வு எனக்குள் ஏற்பட்டது. மனிதர்களும், விலங்குகளும், செடிகளும், கொடிகளும், மரங்களும் - இன்னும் சொல்லப் போனால் எல்லா உயிர்களும் ஒரே பிரபஞ்ச பரம்பொருளுடன்(Eywa) இணைந்து செயல் படுகின்றன என்கிற உயர்ந்த தத்துவம் என்னை மெய் சிலிர்க்க வைத்தது. நானும் இயற்கைக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்கிற ஆழமான எண்ணம் தோன்றியுள்ளது. இந்த வருடத்தில் இருந்து கொடுமையான கொடைக்காலத்திலாவது விலங்கினங்களுக்கு ஏதாவது ஒரு வகையில் ஒரு உதவ வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறேன்.

பையா - இந்த படத்தை பற்றி பெரிதாக சொல்லவதற்கு ஒன்றும் இல்லை. மூன்றே வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால் - பாடல்கள், சண்டைக்காட்சிகள், மிட்சுபிஷி கார். அவ்வளவு தான். 'damsel in distress' எனப்படும் பழைய பார்முலாவில் அடங்கும் நாயகிக்கு உதவ பெங்களூரில் இருந்து மும்பை வரை காரில் அழைத்து போகிறார் ஹீரோ. என்னமோ நாமே மூன்று நாட்கள் காரில் சென்று வந்தது போல் அலுப்பாக இருக்கிறது. ஆனாலும் கார்த்தி ஏமாற்றவில்லை. என்ன ஒரு விஷயம் வருத்தமாக இருக்கிறது என்றால் - உதவாக்கரை ரோலில் அறிமுகமாகி, கூலியாளாக நடித்து, இப்போது தான் காரோட்டி(தேர் ஓட்டறவன் தேரோட்டி-ன்ன, கார் ஓட்டறவன் காரோட்டி தானே?) ரோலில் நடிக்கிறார். இதற்க்கப்பரம் என்ன ரோல் கார்த்தி? ஆபீஸ் பாய், கிளெர்க், ஆபிசர், சூபெர்வைசெர், மேனேஜர் போன்ற வேடங்களில் நடித்து விட்டு சஞ்சய் ராமசாமி போன்ற CEO வேடத்தில் நடிக்க எத்தனை வருடங்கள் பிடிக்குமோ....அதெல்லாம் வேண்டாம் கார்த்தி....இன்றைய நிலையில் இருக்கும் ஆபீஸ் போலிடிக்ஸ்கு இதெல்லாம் நடக்க இன்னும் 30 வருடங்கள் கூட பிடிக்கலாம். அதானால் இனிமேலாவது கொஞ்சம் சீக்கிரமாக முன்னேரும்படியான ரோலஸ்-இல் நடிக்கவும்.(ஓவராக ஜொள்ளு விடுகிறேன் என்று நினைப்பவர்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன். என்னருகில் உட்கார்ந்து தமன்னாவை பார்த்து ஜொள்ளு விட்டு தன் கைக்குட்டை போதாமல் என் துப்பட்டாவை கைப்பிடி துணியை விட மோசமாக நனைத்த என் கணவரை விட நான் தேவலை என்பது என் தாழ்மையான கருத்து).

Fracture - பையா படத்திற்கு நைட் ஷோ கிளம்புவதற்கு முன் டிவியில் இந்த படம் பார்க்க நேர்ந்தது. ஆரம்பம் மட்டுமே பார்க்க முடிந்தாலும் சுவாரஸ்யமாக இருந்தது.ஒரு நல்ல படத்தை இழக்கிறோமோ என்கிற ஒரு சின்ன உறுத்தலோடு தான் டிவியை அணைத்து விட்டு கிளம்பினோம். ஆனால் இன்றைக்கு மறுபடியும் அந்த படத்தை HBO-vil ஒளிபரப்பினார்கள். ஒரு படத்தின் ஆரம்பத்தில் ஒரு சின்ன suspense -ai வைத்து இறுதி வரை ஒரு சுவாரஸ்யமான ஆடு-புலி ஆட்டத்தை நடத்திக் காட்டி இருக்கிறார்கள். அந்த suspense இறுதியில் உடைபடும் வரையில் நிம்மதி இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தேன். இத்தனை சாமர்த்தியமாக பின்னப்பட்ட ஒரு கதையை பார்த்து வெகு நாட்களாகின்றன. இந்தப் படத்தை பார்த்தவர்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள். அத்துடன் படத்தின் பெயர் காரணம் தெரிந்தால் சொல்லுங்கள்.

Thursday, April 1, 2010

நாம சந்கீர்தனமும் ரெட் பஸ்ஸூம்


ஸ்ரீமன் நாராயணனை அடைய பெரிய தபசுகள் எதுவும் தேவை இல்லை. நாமசங்கீர்த்தனம் மட்டுமே போதுமானது என்று உலகுக்கு உணர்த்திய பக்தர்கள், துருவனும் பிரகலாதனும். சாதரணமாக குழந்தைகளுக்கு தான் ஒரு அசாதாரணமான வைராக்கியம் இருக்குமாம். "நாராயணன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்" என்கிற சொற்றொடர் உண்மை என்றால், குழந்தைகளின் வைராக்கியம் எந்த உருவத்திலும் இறைவனை பிரத்யக்ஷ்மாக்கும்.

"The wheels of the bus go round and round
round and round, round and round
The wheels of the bus go round and round
All day long"

இப்படியாகத் தொடங்கும் அந்தப் பாடல். என் இரண்டேகால் வயது மகன்களுக்கு மிகப் பிடித்த அந்த பாடல் பேருந்தின் ஒவ்வொரு பாகத்தின் செயல் பாடு பற்றியும் சொல்லி அவர்களிருவரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும். என் இரண்டாவது மகனான வருணுக்கு நாங்கள் தொலைகாட்சி வாங்கியதே அந்த பஸ் பாடலை பார்க்க தான் என்கிற எண்ணம் எப்படி வந்ததோ தெரிய வில்லை. இவன் அந்த பாடலைப் பார்க்கும் விதத்தில் ஸ்ரீமன் நாராயணன் விரைவிலேயே பஸ் உருவில் எங்கள் வீட்டில் ப்ரத்யக்ஷமாகி 'குழந்தாய், நீ வேண்டுவதை கேள்' என்று கேட்கப்போகிறார். ஆனாலும் இந்த வருண் பயல் "பஸ் ரைம் போடு...நீ வேணா போ" என்று அழுது பெருமாளை கடுப்படிக்க போகிறான்.

குழந்தளுக்காக ரைம்ஸ் cd வாங்கப் போய் கடைசியில் அது எங்களுக்கு இப்படி வினையாகும் என்று துளியும் நினைக்கவில்லை. காலையில் கண் விழித்தது முதல் இரவு கண்ணயர்வது வரை அதே பாடலா? என் அப்பா காலையில் பூஜை செய்பவர். இவனது இந்தப் பாடல் வெறியால் அவர் சொல்லும் ஸ்லோகங்களை மறந்து "The bell on the bus goes ting-a-ling-ling" என்று ஏதோ பூஜையறையில் உட்க்கார்ந்து பிதற்றிக் கொண்டிருக்கிறார். அவர் தேவலை. என்னவர் கல்லூரியில் படிக்கும் தருதலை மாணவர் போலாகி விட்டார். எங்கு பஸ்ஸை பார்த்தாலும் கல்லாலடிக்க முற்படுகிறார். பாவம்...அவருக்கு இந்த பஸ் ரைமால் 'IPL பார்க்க முடியவில்லையே' என்கிற ஆதங்கம். ஆனால் இத்தனையிலும் கலங்காமல் தன் பாட்டுக்கு தன் வேலையில் மூழ்கி இருப்பது என் அம்மா மட்டுமே. வடாமிற்கு மாவு கிண்டுவதாகட்டும், அடைக்கும் அரைப்பதாகட்டும், ஒரு சின்ன குரலில் "humpty dumpty sat on a wall" என்று பாடிய படியே தன வேலைகள் அனைத்தயும் செவ்வனே செய்து விடுவார். அன்று அதிசயமாக என்னவர் ஏதோ ஒரு பாடலை வெகு நேரமாக முனகிகே கொண்டிருந்தார்.இவராவது பாடுவதாவது என்று உன்னிப்பாக கவனித்ததில் அவர் முனகிக் கொண்டிருந்தது - "Tick Tock Tick Tock merrily sings the clock". கஷ்டம் கஷ்டம் என்று தலையில் அடித்துக் கொண்டேன்.

சில நாட்களுக்கு முன்னால் ஒரு சாமியாரின் லீலைகளை தொலைக்காட்சியில் காட்டி ஊரே களேபரமாகிக் கொண்டிருந்த சமயம், பக்கத்துக்கு வீட்டு பெண்மணி வந்து "என்ன அநியாயம் பார்த்தீர்களா?" என்று கேட்டார்.நாங்களும் "ஆமாங்க நாளைக்கு பவர் ஷட்டவுனாமே ...பஸ் ரைம் போடாட்டா எங்க வீட்டுல பிரளயம் வந்துடுமே" என்று நாங்கள் எங்கள் பிரச்னையை சொல்ல போய், கடைசியில் அந்த பெண்மணி எங்கள் எல்லோரையும் மட்டமான ஒரு பார்வை பார்த்து விட்டு சென்றார். அதன் பின் ஏதோ வில்லங்கமான விஷயம் இருப்பதை உணர்ந்த என் கணவர் எனக்கு தமிழ் பத்திரிக்கைகள் வாங்கி தந்து எனது உலக அறிவை மிளிரச்செய்தார்.

என் மகன்கள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருகிறார்கள். இதே வேகத்தில் அந்த CD தேய்ந்து விடாதா என்ற ஏக்கத்துடன் நான் காத்திருக்கிறேன்........

Sunday, March 28, 2010

Vinnai Thaandi Varuvaaya......thevaiya?

VTV....என் பார்வையில்...

அதாகப் பட்டது....

நீண்ட நாட்களுக்குப் பிறகு நேற்று இரவு 'விண்ணைத்தாண்டி வருவாயா' என்ற படத்துக்கு என்னவர் என்னை அழைத்துப் போனார்....சும்மா சொல்லக் கூடாது எனக்கு அப்படியே எருமைமாட்டின் மேல் மழை பொழிந்தது போலவே இருந்தது....இதுக்குப பேரு தான் வயசுக் கோளாறோ? தெரியவில்லை....வாழ்க்கையின் நிதர்சனம் புரிந்து விட்டாதாலோ என்னவோ...."காதல் கசக்குதையா...." என்று பாட தான் தோன்றுகிறதே தவிர ரசித்துக் கொண்டாட முடியவில்லை...

கெளதம் மேனன்-கு சில வரிகள்...

ஏனுங்க கெளதம் மேனன் அண்ணாத்தே/தம்பி......மணமேடை வரை வந்து பிறகு கல்யாணத்தை நிறுத்தறது-ங்கறது உங்களுக்கு அவ்வளவு ஈசியாக போச்சா? அதுனால ஏற்படற அசிங்கம் அவமானம் பத்தி எல்லாம் உங்களுக்கு கவலையே இல்லை? மொட்டை மாடி romance -கற பேருல இங்கே எவ்வளா அசிங்கம் நடக்குது தெரியுமா? ஆபீஸ் கட்டடிச்சுட்டு பைக்-ல மகாபலிபுரம் போறதெல்லாம் இப்படியா legalize பண்ணறது? "ஊர்-ல உலகத்துல எல்லாம் நடக்காததையா நான் சொல்லிட்டேன்" அப்படின்னு நீங்க கேக்கலாம். பட் உங்க படத்துல பார்த்தே சிலருக்கு ஐடியா கிடைக்கலாம் இல்லையா?

இதெல்லாம் கூட பரவா இல்லை அது என்னமோ நீங்களும் சரி, உங்கள மாதிரி இயக்குனர்களும் சரி...என்னமோ பொண்ணுங்க தான் காதல்-ல குட்டைய கொழப்பற மாதிரியும் காதலுக்கு எதிரி-எ பொண்ணுங்களோட அப்பா தான்-கற மாதிரி சொல்லறீங்க?

மூளை இருக்கற எந்த பொண்ணும பீசிபிளிட்டி-ங்கறதை யோசிக்காம இருக்க மாட்டா...அது மட்டும் இல்லாம காதலிக்கற வரைக்கும் தான் அந்த பையன் அவ பின்னாடி சுத்துவான்....கல்யாணத்துக்கு அப்பறம் அந்த பொண்ணோடது தான் எல்லா தலைவலியும்...என்ன பண்ணறது....ஆசை அறுபது நாள்...மோகம் முப்பது நாள்...மொத்ததுல தொண்ணூறு நாள்....அதுக்கப்பறம் நடக்கறதை எல்லாம் இந்த காலத்துல சினிமா-ல சொல்லறது இல்லையே.....விசு, பாலச்சந்தர் மாதிரி நல்ல இயக்குனர்கள் இருந்தப்போ அவங்க அதை எல்லாம் பத்தி படம் எடுத்தாங்க...இப்போ...திங்கள் முதல் வியாழன் வரை இரவு 7- 9 சீரியல் பார்த்து தான் அதை எல்லாம் தெரிஞ்சுக்க வேண்டியிருக்கு....குத்தலா பேசற மாமியார், குதர்க்கமா பேசற நாதனார், காலை வாரற கொழுந்தன்...இதை எல்லாம் கண்டுக்காம போற நம்ம ஹீரோ காதலன் = கணவன்...இதுக்கெல்லாம் மத்தியில பிரச்சனைகளை எதிர்கொண்டு கஷ்டப் படற ஹீரோயின்...தேவையா இதெல்லாம்? நம்ம பொண்ணுக்கு ஏன் அவ்வளா கஷ்டம்-நு தான் பெண்ணை பெத்த ஒவ்வொரு அப்பாவும் நினைப்பார் ...அதுனால போயி அவரை வில்லனா காட்டறீங்களே....

நீங்க சொன்ன ஒரே ஒரு கருத்து தான் எனக்கு பிடிச்சிருந்தது. அதாவது ஹீரோயின் நினைக்கற மாதிரி அமைதியான வாழ்க்கை தான் எல்லாத்தையும் விட முக்கியம்.சொல்ல போனா சந்தோஷமான வாழ்க்கை-ங்கறது ஒரு பிரமை.அதுனால சந்தோஷமான வாழ்க்கையை விட அமைதியான வாழ்க்கையை நாடறது தான் புத்திசாலித்தனம்.....ஆனா இதைக் கூட ஹீரோ கண்ணோட்டத்துல நீங்க தப்பான விதமா காட்டீட்டீங்க...

என்னமோ போங்க...இது முதல்ல தேவையா? வேணுமா? வேண்டாமா? பிடிச்சிருக்கா? இல்லையா? இந்த மாதிரி வாழ்க்கையில கொஞ்சம் கூட தெளிவு இல்லாத இளைஞர்களையும் இளம் பெண்களையும் தான் இந்த மாதிரி படங்கள் உருவாக்குதோ-நு தோணுது....

வெரி சாரி....totally depressing movie!

Friday, March 26, 2010

வெட்டியின் உலகம் - நல்வரவு

"நான் ஒரு முட்டாளுங்க
ரொம்ப நல்லா படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க"

இந்த பாடல் எனக்கு மிகவும் பொருந்தும்.

சுமார் 10 வருடங்களுக்கு முன், வேதியியல் இளகலை பட்டம் மட்டுமே வைத்து கொண்டு பேந்த பேந்த விழித்துக் கொண்டிருந்த என்னை ஒரு பன்னாட்டு மென்பொருள் நிறுவனம் என் தாய்-கு அடுத்த படியாக அள்ளி அரவணைத்தது. அன்றிலிருந்து தான் 'வெட்டி' அத்தியாயம் என் வாழ்க்கையில் தொடங்கியது. என்னை போன்ற மேலும் 24 அப்பாவிகளும் அள்ளிக் கொண்டு வரப்பட்டு ஏதோ ட்ரைனிங் என்ற பெயரில் ஒரு வெட்டி அரட்டை நடத்தப் பட்டது. அதற்கு பின்னர் 'ப்ராஜெக்ட்' என்ற இன்னொரு வெட்டிவேலையில் எங்களை ஈடு படுத்தினர். அப்போ எனக்கு சின்ன வயசு....என் நண்பர்களுக்கும் தான்...காலையில் அலுவலகம் வந்த உடன் சில முக்கிய வெட்டி பிரமுகர்களை மட்டும் கண்டறிந்து (சிலதெல்லாம் வேணும்னே பிஸி-ன்னு பிட் ஓட்டும்) அவர்களுக்கு மட்டும் ஒரு மின் அஞ்சல் பறக்கும்.

Choose the best answer:

"நீ இப்போ செய்து கொண்டிருப்பது?"
a) வேலை
b) வெட்டி
c) வெட்டி வேலை

அனேக நாட்களில் எனக்கு வரும் பதில் Option c -யாக தான் இருக்கும்...அதாவது நான் தேர்வு செய்த பிரமுகர்களிடம் இருந்து...அதன் பின் அன்று நாள் முழுவதும் மின்-அஞ்சலில் வெட்டி கச்சேரி நடத்தப் படும். ஏதாவது ஒரு அறிவு ஜீவி-யை தேர்வு செய்து, அவர்களை ஒன்று இரண்டு மூன்று என்று வரிசை படுத்தி டரியல் செய்து ஒரு மின் அஞ்சல் தாயிருக்கப் படும்

"இன்னா 40" மாதிரி "இன்னார் 40"

1) இன்னாருக்கு பிடித்த biscuit - Krackjack
2) இன்னாருக்கு பிடித்த சாக்லேட் - Crackle
3 )இன்னாருக்குத் தலைவலி வந்தால் உபயோகப் படுத்துவது - Krack கிரீம்

என்று சராமாரியாக ஓட்டல் கச்சேரி நடத்த படும்.
அந்த இன்னாரும் 'சரி இன்னைக்கு நாம மாட்டியாச்சு....வாய தேர்ந்த கதை கந்தல் ஆகிடும்' என்று அறிந்து கொண்டு மெளனமாக இருப்பான்/இருப்பாள்

இப்படியாக நான் உணர்ந்த வெட்டித் தனம் போக போக என் வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே ஆகி விட்டது...

நான் செய்யும் பல வெட்டி வேலைகளை இன்னும் சிறப்பிக்க தான் இந்த வலைப் பதிவு.

welcome to my vetti world.....